Posts

Showing posts from June, 2020

தற்காலிக மனிங் அரசியல் சீர்திருத்தம். (1921-1924).

Image
தற்காலிக மனிங் அரசியல் சீர்திருத்தம். (1921-1924).  அறிமுகம்: தற்காலிக மெனிங் அரசியலமைப்பு இலங்கையில் 1921 முதல் 1924 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்றாவது அரசியலமைப்பும் இதுவே. யாப்புருவாக்க பின்னணி: இலங்கையின் தேசிய காங்கிரஸ் அரசியல் யாப்பில் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த வகையில், 1. சட்டசபையில் 05 பிரதிநிதிகள் இருத்தல் வேண்டும். 2. பரந்த அடிப்படையில் ஆண்களுக்கும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெண்களுக்கும், வாக்குரிமை வழங்கப்பட வேண்டும். 3. ஐந்தில் ஒரு பங்கினர் சிறுபான்மையோராக இருத்தல் வேண்டும். தற்காலிக மனிங் அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்: 1.உத்தியோகப் பற்றற்றவர்களின் எண்ணிக்கை சட்டசபையில் அதிகமாக இருந்தமை. 2.தொடர்ந்தும் தேசாதிபதிக்கு மறுப்பாணை அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 3. நிதிக்குழுவில் முதன் முதலாக இலங்கையர் ஒருவர் உள்வாங்கப்பட்டார் 4.சட்டசபையில் உத்தியோகப் பற்றற்ற மூவர் சட்ட நிர்வாக சபையில் இடம்பெற்றனர். ஐரோப்பா ...

குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம்

Image
குறூ-மக்கலம் அரசியல் சீர்திருத்தம் ( Crewe-McCallum Reforms) - 1910 இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்றில் உருவான இரண்டாவது அரசியல் சீர்திருத்தம் இதுவாகும். அதாவது கோல்புறுக் சீர்திருத்தத்தின் பின்னர் உருவான ஒரு காலனித்துவ யாப்பு ஆகும். குரு மக்கலம் அரசியல் அமைப்பு என்பது இலங்கையில் 1910 முதல் 1921 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு. கோல்புறுக் யாப்பில் உருவான அதிருப்திகள் வெளிப்பட ஆரம்பித்ததுடன், அதனை திருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. இலங்கையில் 1833 ம் ஆண்டு முதல் 1910 ம் ஆண்டுவரை கோல்புறூக் அரசியல் அமைப்பின் கீழ் உள்நாட்டு மக்களின் நலவுரிமைகள் எவ்விதத்திலும் பேணப்படவில்லை. குறிப்பாக இந்த அரசியலமைப்பானது பிரித்தானிய ஏகாதிபத்திய நலவுரிமைகளை மாத்திரம் பேணக்கூடிய வகையிலும் இலங்கையின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தினை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்ட வகையிலுமே இந்த அரசியலமைப்பு இலங்கையில் செயல்பட்டது. இந்த நிலையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களுக்கான அதிகாரம் வழங்கப்படல் குறித்தும் பல பல கோரிக்கையை முன்வ...
Image
கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910). அறிமுகம்: கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு (Colebrooke-Cameron Commission) என்பது பிரித்தானிய இலங்கையின் நிருவாகத்தை மதிப்பிடுவதற்கும், அந்நாட்டின் நிருவாகம், நிதி, பொருளாதாரம், மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் மெற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும், 1829 ஆம் ஆண்டில் பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தினால் அமைக்கப்பட்ட ஒரு அரசு ஆணைக்குழு ஆகும். இவ்வாணைக்குழுவில் டபிள்யூ. எம். ஜி. கோல்புரூக், மற்றும் சி. எச். கேமரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களது பரிந்துரைகளில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை கோல்புறூக்-கேமரன் சீர்திருத்தங்கள் என அழைக்கப்பட்டன. இலங்கையில் 1833 முதல் 1910 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது அரசியலமைப்பும் இதுவே. இலங்கையில் மன்னராட்சி முறையின் கீழ் அல்லது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் திட்டமிடப்பட்ட அரசியல் நிர்வாகமுறை எதுவும் காணப்படவில்லை. இலங்கையின் அரசியலானது மன்னராட்சிக் காலத்தில் மரபுவழி சார்ந்த நிர்...

கால்மார்க்சும், மாக்சிச சிந்தனையும்.

Image
கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ் 5 மே 1818 அன்று பிறந்தார்.  ஜேர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார். மூலதனம் நூல்: அக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் ஏதிலிகளுக்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நா...

மாக்கியவெல்லியும் அரசியல் விஞ்ஞானத்திற்கு ஆற்றிய பங்களிப்பும்

Image
மாக்கியவெல்லி வாழ்க்கை: நிக்கோலோ மாக்கியவெல்லி என சுருக்கமாக அறியப்படும் நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி (Niccolò di Bernardo dei Machiavelli) ஒரு இத்தாலிய ராஜதந்திரியும், அரசியல் மெய்யியலாளரும், இசைக் கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். நவீன அரசியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தில் - மே 3, (1469 – சூன் 21, 1527 ) நிக்கலோ மாக்கியவல்லி பிறந்தார். இவருடைய குடும்பம் பணவசதியோ, சமூக அந்தஸ்த்தில் உயர்ந்த குடும்பமாகவோ இருந்திருக்கவில்லை. ஆனால் நகர மட்ட மானிட வட்டத்திற்குள் புகழ்வாய்ந்த குடும்பமாக காணப்பட்டிருந்தது. மாக்கியவல்லியின் தந்தை பெர்னார்டோ டி நிகோலோ மாக்கியவெல்லி (Bernardo di Nicolo Machiavelli) ஒரு வழக்கறிஞராக இருந்ததுடன் புராதன வரலாறு பலவற்றையும் கற்றிருந்தார். மாக்கியவல்லி புளோரன்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை பூர்த்தி செய்ததுடன் லத்தீன் மொழி, மானிடவியல் ஆகிய துறைகளில் புலமை வாய்ந்தவராகவும் காணப்பட்டிருந்தார். மாக்கியவல்லியின் காலத்திற்கு இத்துறைகளில் புலமை பெறுவது அவசியமானதாகவும்,பெறுமதி வாய்ந்ததாகவும் கருதப்பட்டிருந்தது.  கி.ப...